குறுந்தொகை - 22
பாடலாசிரியர் : சேரமான் எந்தை
பாலைத் திணை –
தலைவன் தன்னை பிரிந்து செல்லப்போகிறான் என்பதை முன்னரே
உணர்ந்துவிட்டாள் தலைவி.. அதனால் கண்ணீர் சிந்துகிறாள்.அதைக்கண்ட தோழி, வருந்தாதே..அவர்
உன்னையும் உடன் அழைத்துச் செல்வார் என ஆறுதல் கூறுகிறாள்
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனி லஞ்சினை கமழும்
தேமூ ரொண்ணுத னின்னொடுஞ் செலவே.
- சேரமானெந்தை
மலைப்பகுதியானது ,வேனிற்
காலத்தில் தனக்கு அழகாக இருக்கும் அழகிய வெண் கடப்ப மலரை உடைய அழகிய மரத்தின் கிளைகளிடத்தில்
பரப்புகின்ற மணத்தை விளக்குவது போன்ற நெற்றியை உடைய (தலைவன் பிரிவதால்) துயரத்தால் கண்ணீர் விடும் கண்ணை
உடைய உன்னை தனியாகத் தங்க பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர் யார்?
(தலைவன் உன்னையும்
அழைத்தே செல்வான்.)