குறுந்தொகை - 15.
பாடியவர் ஔவையார்
பாலை - செவிலி கூற்று
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
பொருள்:
பறைபட-மேளம் ஒலிக்க, பணிலம்
ஆர்ப்ப-சங்கு ஓசை எழ , இறை கொள்பு-திருமணம் புரிதல் ,பொது இல் -பொது இடம்,ஆய்கழல்
-அழகிய கழல், சேயிலை-செம்மையான இலை(பசுமையான இலை), வெல்வேல்-வெள்ளி வேல்,தொகு வலை-நிறைய
வளையல், மடந்தை-பேதை பெண்
கருத்துரை:
பறைகள் ஒலிக்கவும் சங்குகள் ஊதவும்,
பழைய முதிய ஆல மரத்தடியில் கூடிய பொதுமன்றத்தில் நான்கு பேர் கூடியிருக்கையில் கோசர்கள்
உரைத்த சூளுரையை நிறைவேற்றியது போல, ஆண்களின் காலில் அணியும் அணியான கழல் அணிந்த, சிவந்த
இலை போன்ற , வெள்ளி போன்ற வேலையும் உடைய தலைவனுடன், வரிசையாய் முன் கையில் வளையல்கள்
அணிந்த நம் பருவப்பெண்ணின் நட்பு உண்மையானது.
குறிப்பு:
(மோகூர் பழையன் என்பானுக்கு
மோரியர்களுடனான போரில் உதவுவோம் என உறுதி கொடுத்து கோசர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றினார்களாம் - அதுவே சொல்லப்பட்டுள்ளது)
நாலூர் கோசர் நன்மொழி-வரலாற்று
செய்தி