குறுந்தொகை 4,
இயற்றியவர் : காமஞ்சேர்
குளத்தார்,
நெய்தல் திணை,
தலைவி சொன்னது
இமை தீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே.
அருஞ்சொற்பொருள்
நோம் என் நெஞ்சே – நோகும் என் நெஞ்சே,
நோம்என் நெஞ்சே – நோகும் என் நெஞ்சே, இமை – இமைகள், தீய்ப் பன்ன
– சுடுவதைப் போல்,
கண்ணீர் தாங்கி -கண்ணீரை துடைத்து, அமைதற்கு அமைந்த – பொருத்தமாக அமைந்த,
நம் காதலர் – என்னுடைய காதலர், அமைவிலர் ஆகுதல் - பொருந்தாதவராய் ஆகியதால், நோம் என் நெஞ்சே – நோகும் என் நெஞ்சு
கருத்துரை:
நோகும் என் நெஞ்சு,
நோகும் என் நெஞ்சு, இமைகளைத் தீயச் செய்யும்
என் கண்ணீரைத் துடைத்து எனக்கு பொருத்தமாக
இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக
ஆகி விட்டார். நோகும் என் நெஞ்சு.
============== Kurunthokai 4 Situation: Thalaivi is seperated from thalaivan hence she utters this poem.