குறுந்தொகை 4

குறுந்தொகை 4,
இயற்றியவர் : காமஞ்சேர் குளத்தார்,
நெய்தல் திணை,
தலைவி சொன்னது



நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே.

அருஞ்சொற்பொருள்

நோம் என் நெஞ்சே நோகும் என் நெஞ்சே, நோம்என் நெஞ்சே நோகும் என் நெஞ்சே, இமை இமைகள், தீய்ப் பன்ன சுடுவதைப் போல்,  கண்ணீர் தாங்கி -கண்ணீரை துடைத்து, அமைதற்கு அமைந்த பொருத்தமாக அமைந்த, நம் காதலர் என்னுடைய காதலர், அமைவிலர் ஆகுதல் -  பொருந்தாதவராய் ஆகியதால், நோம் என் நெஞ்சே நோகும் என் நெஞ்சு

கருத்துரை: 


நோகும் என் நெஞ்சு, நோகும் என் நெஞ்சு,  இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து  எனக்கு பொருத்தமாக இருந்த என் காதலர்  இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார்.  நோகும் என் நெஞ்சு.



============== 
Kurunthokai 4 Situation: Thalaivi is seperated from thalaivan hence she utters this poem.