குறுந்தொகை 10

குறுந்தொகை 10 
ஓரம்போகியர்
மருதம் திணை-  தோழி, நேர்மையற்ற தலைவன் பற்றி உரைத்தது


யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே
.
  
அருஞ்சொற்பொருள்

யாய் ஆகியோள்- தலைவியானவள் , விழவு- செல்வம், பயறுபோலிணர- பயரிற்றம் செடி போன்ற, மென்சினை- மெல்லிய கிளை,
                                
செய்யுள் கருத்து
தலைவனுக்கு மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொணர்ந்த தலைவி, உழவர்கள் தங்கள் வயலில் விளைந்த பயிற்றம் கொற்று போன்ற பூங்கொத்தில் உள்ள மகரந்தம் தன்மேல் படும் படி உழவர்கள் வலைக்கின்றபடி மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்களை உடைய நாட்டின்  தலைவன் செய்த கொடுமையைப் பிறரிடம் உரைத்தால் அவனுக்கு அவமானம் என மறைத்தாள்.