கடவுள் வாழ்த்து.

கடவுள் வாழ்த்து
இயற்றியவர் : பெருந்தேவனார்.     


தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே
கருத்துரை  


தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள். பவழம் போல சிவந்த உடல். உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி.. குன்றிமணி போல சிவந்த ஆடை. குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை. இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.