குறுந்தொகை : 1
இயற்றியவர் : திப்புத்தோளார்
குறிஞ்சித்திணை
தோழி தலைவனிடம் கையுறை ஏற்க மறுத்துக்
கூறுதல்
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடிச், சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடிச், சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே
தோழி கையுறை மறுத்தது. :
தலைவியை அணுக முதலில் அவள்
தோழியை தன் வசம் கொணர்தல் அவசியம் என உணர்ந்த தலைவன், தோழியிடம் செங்காந்தள் பூவைக் கொடுத்து, அதை தன்
தலைவியிடம் கொடுத்து தனது அன்பை அவளிடம் வெளிப்படுத்துமாறு கூறுகிறான். அப்போது தோழி
கையுறை ஏற்க மறுத்து தலைவனை நோக்கிக் கூறியது.
அருஞ்சொற்பொருள்
செங்களம்- செங்குருதியால்
போர்க்களம் செந்நிறமாக , பட-தோன்ற, கொன்ற- அழித்த, அவுணர் தேய்த்த- அசுரர்களைக் கொன்று அழித்த, செங்கோல் அம்பின்-சிவந்த நீண்ட அம்பினையும்,
செங்கோட்டி யானை- சிவந்த கொம்பினையுடைய யானையையும், கழல்தொடி - கழன்று விழுகின்ற தோள்வளை, சேஎய்
- சிவந்த நிறமுடையவன் (குறிஞ்சிநில முருகன்),
குருதிப் பூவின்- இரத்த நிறமுள்ள பூவின், குலை- கொத்து, காந்தட்டு ஏ- காந்தளை
உடையது.
கருத்துரை
==========
====