குறுந்தொகை : 1

குறுந்தொகை  : 1 
இயற்றியவர் : திப்புத்தோளார்  
குறிஞ்சித்திணை
தோழி தலைவனிடம் கையுறை ஏற்க மறுத்துக் கூறுதல் 


செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடிச், சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

  
தோழி கையுறை மறுத்தது. :

தலைவியை அணுக முதலில் அவள் தோழியை தன் வசம் கொணர்தல் அவசியம் என உணர்ந்த தலைவன்,  தோழியிடம் செங்காந்தள் பூவைக் கொடுத்து, அதை தன் தலைவியிடம் கொடுத்து தனது அன்பை அவளிடம் வெளிப்படுத்துமாறு கூறுகிறான். அப்போது தோழி கையுறை ஏற்க மறுத்து தலைவனை நோக்கிக் கூறியது.


அருஞ்சொற்பொருள்

செங்களம்- செங்குருதியால் போர்க்களம் செந்நிறமாக , பட-தோன்ற, கொன்ற- அழித்த, அவுணர் தேய்த்த- அசுரர்களைக் கொன்று  அழித்த, செங்கோல் அம்பின்-சிவந்த நீண்ட அம்பினையும், செங்கோட்டி யானை- சிவந்த கொம்பினையுடைய யானையையும், கழல்தொடி - கழன்று விழுகின்ற தோள்வளை, சேஎய் - சிவந்த நிறமுடையவன் (குறிஞ்சிநில முருகன்),  குருதிப் பூவின்- இரத்த நிறமுள்ள பூவின், குலை- கொத்து, காந்தட்டு ஏ- காந்தளை உடையது.
                       
கருத்துரை    
                          

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி பகைவர்களைக் கொன்று அழித்தவன்; இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினைக் கொண்டவன்; குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும் உடையவன்;  இடையில் உழலும் வாளையும் கொண்டவன்.  சிவந்த நிறமுடையவன். அவனே, குறிஞ்சி நில முருகன். இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறியாமை.. அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள்.
==========
======================


====
• Blood red Kanthal – Kurunthokai 1 – Audio recording kurunthokai 1: Poet – Tipput Tolar Situtation: Thalaivan , wishing to make love to Thalaivi , has brought a gift of red kantal flowers, whose acceptance means that she will have him.